உதகையில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்

நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி : உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் உள்ளூர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப்புற பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருகிறது. இதனால், சில மனித உயிர்களும் பலியாகி வருவது வாடிக்கையாகவே உள்ளது.

இந்நிலையில், கூடலூர், தேவலா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் தற்போது உதகையை அடுத்த தூனேரி கிராமத்தில் தங்கி தனியார் தேயிலை எஸ்டேட்டில் இலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல, அவர் இன்று தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிறுத்தை ஒன்று அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...