நீலகிரியில் அபாயகரமான மரங்களை அகற்ற உத்தரவு: மரம் விழுந்து மக்கள் பலியாவதை தடுக்க நடவடிக்கை

நீலகிரி: பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி: பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், குந்தா, பந்தலூர், அப்பர் பவானி, தேவாலா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.



இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, சாலையோரங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு பகுதிகள் என பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களைக் கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.



மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் துரிதகதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.



இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், மேலும் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...