கோவை வழியாக கேரளாவுக்கு குட்கா பொருட்கள் கடத்த முயன்ற இருவர் கைது

கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.



கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர்கள் விபின் (30) மற்றும் ரியாஸ் (33). இவர்கள் பெங்களூரில் இருந்து பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை வாங்கி அவற்றை கோவை வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர்.

அவர்களது கார் வாளையார் அருகே சென்ற போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற காரில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக, வழக்குத் தொடுக்க இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் பான் மசாலா பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...