கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்த முயன்ற இருவரை கந்தன்சாவடி போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மூவாட்டுப்புழாவை சேர்ந்தவர்கள் விபின் (30) மற்றும் ரியாஸ் (33). இவர்கள் பெங்களூரில் இருந்து பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை வாங்கி அவற்றை கோவை வழியாக கேரளா கொண்டு செல்ல முயன்றனர்.
அவர்களது கார் வாளையார் அருகே சென்ற போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்ற காரில் இருந்த 150 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, வழக்குத் தொடுக்க இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் பான் மசாலா பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.