சாயக் கழிவுகள் கலந்ததால் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் விவசாய கிணறு : விவசாயிகள் வேதனை

திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் விவசாய கிணறு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் விவசாய கிணறு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நீர் நிலைகளும், நிலத்தடி நீரும் மாசடைந்து வருகின்றன. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை எஸ்.பெரியபாளையம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்த நீர் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக திடீரென பச்சை நிறமாக மாறிக் காட்சியளித்தது. இதற்கு காரணம் அப்பகுதிகளில் செயல்படும் சாய ஆலை மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவு நீர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறும் பொழுது, "இப்பகுதியில் செயல்படும் சில சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் சாயக் கழிவு நீரை போர்வெல் மூலம் நிலத்தில் இறக்கி விடுகின்றனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் கெட்டு முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய நிலங்கள் காய்ந்து போய் உள்ளன. கழிவு நீர் கிணற்றில் கலந்ததன் காரணமாக கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...