தமிழகம் முழுவதும் 100 சதவீதம் வரை உயர்ந்தது சொத்து வரி: நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கோவை: தமிழகம் முழுவதும் சொத்துவரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கோவை: தமிழகம் முழுவதும் சொத்துவரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டுக்கு பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டது. இதையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

உயர்வு

மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புக்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி விதிக்கப்பட உள்ளது.

பாதிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வால் நடுத்தர, சாதாரண ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...