கோவையில் குளங்கள் மற்றும் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து கோவை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அலுவலர்களுடன் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 8 குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்துக்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், குளங்களில் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் பொதுப் பணித்துறையுடன் இணைந்து நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

மேலும், குளங்களில் நீர்வரத்துக்கான ஆக்கிரமிப்புகளை கண்காணித்து அகற்ற, தண்ணீர் வரத்து சரிசெய்யவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அனைத்து வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்களில் நிறுவிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

 

நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் தண்ணீர் சேமிப்புக்காக விழிப்புணர்வுக்காக பட விளக்கம் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சேத்துமா வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்தினை கண்காணிக்கவும், தேவையான மணல் மற்றும் சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளின் பயன்கள் குறித்து தன்னார்வ அமைப்பினர் எடுத்துரைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...