லாரி ஸ்ட்ரைக்: நீலகிரி காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

நீலகிரி: நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.


நீலகிரி: நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை. இதனால், விவசாய விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது தடைபட்டுள்ளது.



லாரிகள் வேலைநிறுத்தத்தையொட்டி சிலர் முன்கூட்டியே மலைக்காய்கறிகளை அறுவடை செய்தனர். தற்போது லாரிகள் ஓடாததால் விவசாயிகள் மலைக்காய்கறிகளை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். இதன் காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

மார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, வயநாடு, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறிய ரக சரக்கு வாகனங்களில் மலைக்காய்கறிகள் ஏற்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரியில் அதிக அளவிலான காய்கறி மூட்டைகளை ஏற்றலாம். சரக்கு வாகனங்களில் குறைந்த அளவிலேயே காய்கறிகளை ஏற்ற முடியும். இருந்தாலும், சரக்கு வாகனங்களில் வெளியிடங்களுக்கு மலைக்காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.



மேலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், உள்ளூரில் விளையும் கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், டர்னீப் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் வெளியிடங்களுக்கு அனுப்புவது குறைந்துள்ளது.

விலை உயர்வு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மலைக்காய்கறிகள் மூலம் தினமும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெறும். ஆனால், தற்போது ரூ.10 லட்சம் வரை மட்டுமே வியாபாரம் நடந்து உள்ளதுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.30 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஒரு கிலோ புரூக்கோலி ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. ஆனால், தற்போது ரூ.30 விலை உயர்ந்து கிலோ ரூ.100–க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.55, கேரட் ரூ. 20-25, பீட்ரூட் ரூ.30-35க்கு விற்பனை ஆகிறது.



தொடர்ந்து காய்கறிகள் விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...