கோவையில் நடப்பாண்டில் மட்டும் 1,576 பேர் காசநோயால் பாதிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 1,576 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 1,576 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசநோயை வரும் 2025-ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காசநோய் கண்டறியும் பிரச்சார வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல உள்ளது. இதனை இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரிடியாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு முறையான பரிசோதனை மூலம் கண்டறிய உள்ளது. 



இது குறித்து இணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) கூறியதாவது:- கடந்த 2015-ம் ஆண்டு 3,085 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் காசநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 87% வரை குணமடைந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு இதுவரை கோவை மாவட்டத்தில் 1,576 காசநோயாளிகள் நடப்பாண்டில் கண்டறியப்பட்டுள்ளது.



இந்த வாகனம் தமிழக முதலமைச்சரால் கடந்த மார்ச்14-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரி எடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளும் போது ரூ. 2,000 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் 240 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இரண்டு பரிசோதனை மாதிரிகள் ஒன்று கோவையிலும், மற்றொன்று சென்னையில் உள்ள இண்டர் மீடியேட் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையுடன் சிகிச்சை அளிக்கப்படும், என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...