5 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: தொடர் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சேலம்: தொடர் கனமழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பினால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து 12 மணி முதல் 40,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பை கருதி கூடுதலாக 10,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடி, அணையில் இருந்து இருந்து நீர்திறப்பு 30,000 கனஅடியாக தற்போது உள்ளது. மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 92.53 டி.எம்.சி.யாக உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையம் வழியாக உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக கிழக்கு - மேற்கு கால்வாயில் 200 கனஅடியும் என மொத்தம் 30,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அதிகளவு உபரிநீர் திறக்கப்படுவதால், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு உள்பட 12 மாவட்ட ஆட்சியர்கள் மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...