4-வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக் ; ரூ. 4,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 4,000 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 4,000 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான காய்கறிகள் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.



விவசாயிகள் தங்கள் பொருட்களை வெளியே அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், காய்கறிகள் அழுகும் நிலை உருவாகியுள்ளது. அதே சமயம் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், தொழில் நகரமான கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் பலர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என சிறு, குறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, 4-வது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை வர்த்தக தேக்கம் அடைந்துள்ளதாகவும், பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...