திருப்பூரில் செக் மோசடி வழக்கில் பனியன் நிறுவன மேலாளர் உட்பட இருவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காசோலையில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.50 கோடி மோசடி செய்த மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காசோலையில் போலி கையெழுத்து போட்டு ரூ. 1.50 கோடி மோசடி செய்த மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அவினாசி சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கிருபாசங்கர் என்பவர் மேலாளராக பணி புரிந்து வருகிறார். 

நிறுவனத்தின் வங்கி கணக்கு திருப்பூர் குமரன் சாலையிலுள்ள கரூர் வைஸ்யா வங்கியிலுள்ளது. சமீபத்தில் பழனிசாமி கையெழுத்து போட்ட காசோலை வங்கிக்குச் சென்றுள்ளது. கையெழுத்து வேறுபாடாக இருக்கவே வங்கியிலிருந்து பழனிசாமியை தொடர்பு கொண்ட போது, தான் எதுவும் காசோலை வழங்கவில்லை என கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, பனியன் நிறுவன கணக்கை தணிக்கை செய்ததில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 1.50 கோடி அளவில் மோசடி நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பனியன் நிறுவனத்தின் மேலாளர் கிருபாசங்கரிடம் விசாரித்த போது, கடந்த 4 ஆண்டுகளாக பழனிசாமியின் கையெழுத்திட்டு பணத்தை எடுத்து, தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வங்கி கணக்கில் அனுப்பி மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பழனிசாமி புகார் அளித்ததின் பேரில் கிருபாசங்கர்(27), கிருஷ்ணராஜ்(52) ஆகிய இருவரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதில் வங்கி ஊழியர்களுக்கு ஏதும் தொடர்புண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...