குளங்களை பார்வையிட 'ஹாயாக' கோவையை வலம் வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை அமைச்சர் வேலுமணி இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

கோவையின் பல்வேறு பகுதிகள் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக் கோவையில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், நிரம்பி வழியும் குளங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார். குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களான புட்டுவிக்கி போன்ற குளங்களை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.



குளங்களை பார்வையிட அமைச்சர் சென்ற விதம் மக்களை ஆச்சரியப்பட வைத்தது. இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்செல்ல, அவரது பின்னால் அமர்ந்தபடி, பயணித்த அமைச்சரை பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். 

இது தொடர்பாக, அவரது பேஸ்புக் பக்கத்தில், கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வழியும் நிலையில், குளக்கரையின் உயரத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எங்க ஹெல்மெட்?

அமைச்சர் இப்படி பயணம் செய்ய, அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மீண்டுமொரு முறை நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த சூழலில், தமிழக அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்த விவகாரம் சர்ச்சையை உண்டாகியுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...