சேலத்தில் பல பகுதிகளில் நில அதிர்வு: மக்கள் பீதி

சேலம்: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


சேலம்: சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் மாநகரப் பகுதிகளில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

சேலம் மாநகராட்சியின், கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி, மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளில் இன்று காலை 7:47 மணி அளவில் சில விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு சேலம் அம்மாப்பேட்டையில் தொடங்கி பென்னாகரம் வரை உள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேட்டூர் அணையில் தற்போது 116.98 அடிக்கு மேல் நீர் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் நில அதிர்வை கணக்கீடு செய்யும் சிஸ்மோமீட்டர் பழுதடைந்து விட்டதால் நில அதிர்வு அளவு இன்னும் கணக்கிடும் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

எனினும் சிறிது நேரத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நில அதிர்வு பதிவாகியிருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...