மாணவி உயிரிழந்த விவகாரம்: போலி பயிற்சியாளருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்தவர் கைது

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த யோகானந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த யோகானந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி (18) உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவில் 304-ல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து ஆறுமுகம் வைத்திருந்த போலிச்சான்றிதழ் தொடர்பாகவும், அவருடைய பின்னணி குறித்து அறிய ஆலாந்துறை போலீசார் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனையிட்டதில் கட்டுக்கட்டாக போலி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள், போலியாக தயாரித்த சீல்டுகள் இரண்டு கணினி மற்றும் பிரிண்டர்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த சிவகாசியைச் சேர்ந்த யோகானந்த் (49) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் அச்சடித்துக் கொடுத்ததும், கடந்த 5 ஆண்டுகளாக போலி சான்றிதழ் வழங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...