8 வழிச்சாலைத் திட்டம் மக்களுக்கானதாகவே இருக்க வேண்டும் : உதகையில் நல்லசாமி பேட்டி

நீலகிரி : சேலம் முதல் சென்னை வரை கொண்டு வரப்பட்டுள்ள 8 வழிச்சாலைத் திட்டம் மக்களுக்காகவே இருக்க வேண்டும் என உதகையில் தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : சேலம் முதல் சென்னை வரை கொண்டு வரப்பட்டுள்ள 8 வழிச்சாலைத் திட்டம் மக்களுக்காகவே இருக்க வேண்டும் என உதகையில் தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். 

உதகையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- சேலம் முதல் சென்னை வரை கொண்டு வரப்பட்டுள்ள 8 வழிச்சாலை காலத்தின் கட்டாயமாகும். இந்தத் திட்டம் மக்களுக்காகவே இருக்க வேண்டும். அரசு மற்றும் துறை சார்ந்தவர்களின் ஆதாயமாக இருக்கக் கூடாது. 



நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் நீர் வீணாக கேரளாவில் உள்ள அரபிக்கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை பாண்டியாறு-புன்னம்பழம் ஆற்றில் குறுக்கே சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் தடுப்பு அணைகளை கட்டி, மீண்டும் மாயார் ஆற்றிற்கு திருப்பினால் டெல்டா விவசாயிகள் பயன் பெறுவர். மேலும், நீலகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டுமென்றால் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இல்லையெனில், நாடு பாலைவனமாக மாறி விடும். இஸ்ரேல் போன்ற பாலைவன நாடுகளில் கூட ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்தியாவிலும் நிலத்தடி நீரை எடுக்கப் படிப்படியாக தடை விதிக்க வேண்டும். 

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் மேட்டூர் அணையில் தேங்கியிருந்தால் நடப்பாண்டில் குறுவை சாகுபடி சாத்தியமாயிருக்கும். குறுவை சாகுபடி செய்யாமல் போனது தீர்ப்பில் உள்ள மாதந்திர அடிப்படையில் என்ற அம்சம் தான். இந்த தீர்ப்பு திருத்தப்பட்டு தினந்தோறும் நீர் பங்கீடு என்று சட்டம் திருத்தி அமைக்க மாநில அரசு உடனடியாக மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...