கோவையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர்

கோவை: கோவையில் கல்லூரி உதவி பேராசிரியரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவையில் கல்லூரி உதவி பேராசிரியரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி, சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இன்று இவரது அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 



இந்தத் தகவலையடுத்து போலீசார் அவரது அறைக்குச் சென்று கதவை உடைத்துப் பார்த்தபோது, அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். திருமணமாகாத விஜயகுமாரின் தாய் சமீபத்தில் தான் இறந்துள்ளார். தாய் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

அவர் உயிரிழந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கும். அதனால், முற்றிலும் அழுகிய நிலையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரி பேராசிரியர் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...