பல்லடம் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை : கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே இச்சிப்பட்டியில் சேகர் மற்றும் ரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர்கள் துணி இஸ்திரி செய்யும் கடையை நடத்தி வந்தனர். இவர்களுடன் கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த ஜான்சன், மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஜான்சன் வீட்டிற்கு ரத்தினம் (35) சென்றுள்ளார். இதனை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் ஜான்சனும், ரத்தினமும் வெளியே வரவில்லை. இதனால், அருகிலிருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது, ரத்தினம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்லடம் போலீசாருக்கும், ரத்தினத்தின் கணவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது- தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இன்று அதிகாலை முதல் ஜான்சன் தலைமறைவானது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவான ஜான்சனை பற்றியும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...