கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும், லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜுலை 20) முதல் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆட்டோ தொழிலைப் பாதிக்கக்கூடிய வகையில் காப்பீடு கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவை தெற்கு தாலுகா அலுவகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, மத்திய அரசிற்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...