கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்: போலி பேரிடர் மேலாண்மை பயிற்சியாளருக்கு 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நரசீபுரம் பகுதியில் உள்ள கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர், லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.

இதில் எதிர்பாராத விதமாக மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு ஆலாந்துறை போலீசார், போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆறுமுகம், போலியான ஆவணங்களைக் கொடுத்து நாடு முழுவதும் 1,467 கல்வி நிலையங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் 7 நாட்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் மட்டும் விசாரணைக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆறுமுகம் ஆஜர்படுத்தப்பட்டர். அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க 6-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...