போத்தனூர் அருகே டாஸ்மாக் கடை அமைவதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்

கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலை உழவன் நகர் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மதுபான கடை அமைய உள்ள இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலை உழவன் நகர் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மதுபான கடை அமைய உள்ள இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "குடியிருப்பு அதிகம் உள்ள இப்பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சரின் தனி பிரிவு வரை மனு அளித்தோம். இங்கு கடை அமையாது என அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில், தற்போது கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்." என்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற பெண் கூறுகையில், "இப்பகுதியில் வசிக்கின்றனவர்களின் குழந்தைகள் இந்த மதுபான கடையை தாண்டி தான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

மதுபான கடைக்கு மாற்றாக மக்களின் அத்தியாவசியமான ரேசன் கடையோ, சுகாதார அலுவலகம் அமைக்கலாம். மதுபான கடை இங்கு அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...