இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது; பஞ்சாக மாற்றுவதில் தரம் குறைக்கப்படுகிறது - இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பு

கோவை: இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது என்றும், அதனை பஞ்சாக மாற்றும் போதசு அதன் தரம் குறைக்கப்படுகிறது என்றும் இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்திய பருத்தி உலகத் தரம் வாய்ந்தது என்றும், அதனை பஞ்சாக மாற்றும் போதசு அதன் தரம் குறைக்கப்படுகிறது என்றும் இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார். 

​இந்திய ஜவுளி முனைவோர் அமைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மில்களுக்கு தேவையான பஞ்சு தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள ஜின்னிங் மில்களில் இருந்து பெறப்படுகிறது.

இந்தியாவில் விளையும் பருத்தி உலகில் தரம் வாய்ந்த பருத்திகளில் ஒன்று. ஆனால் பஞ்சாக்கும் செயல்முறையில் வேற்றுப் பொருட்கள் சேர்வதால் தரம் குறைவாக மதிப்பிடப்படுகிறது.

இதனை களைய ஜின்னிங்​ ​மில்களில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சிகள் வெற்றி அடையும் போது சர்வதேச சந்தையில் பருத்தி மற்றும் ஜவுளி பொருட்களின் தரம் உயர்ந்து தொழில் மேம்படும். முன்னதாக நேற்று 64 ஜின்னிங் மில்கள் மற்றும் ஸ்பின்னிங் மில்களுக்கு சென்று அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிந்தேன். இன்று மாலை நூற்பாலை-ஜின்னிங் மில் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 15 ஜின்னிங் மில்களுக்கு 'சிறந்த ஜின்னர் விருது (2017-18) வழங்கப்பட உள்ளது." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...