கோவையில் விற்பனையாகும் மீன்களில் வேதிப் பொருட்கள் கலந்துள்ளதா?: நவீன உபகரணங்கள் மூலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை: உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டில் பார்மலின் செலுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை: உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்கெட்டில் பார்மலின் செலுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

கேரளாவில் இருந்து கோவை வரும் மீன்களில் பார்மலின் என்ற வேதிப்பொருள் தெளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. தகவலின் அடிப்படையில், இன்று காலை உக்கடம் மீன் மார்க்கெட்-க்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள 45 கடைகளிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மீன்களை சோதனை செய்தனர்.



இந்த சோதனையில், பார்மலின் கலந்திருப்பதை கண்டுபிடிக்கும், ராபிட் புளோரசென்ட் பார்மலின் (Rapid fluorescent formalin) என்ற நவீன கருவி மூலம் ஆராயப்பட்டது. அப்போது மீன்களில் பார்மலின் திரவம் தெளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பார்மலின் தெளித்த மீன்களை தவிர்ப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறுகையில், "மீன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் வேதிப்பொருட்கள் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் சோதனை நடத்தினோம்.

மீன்களை ஒரு முறைக்கு மூன்று முறைக்கு மேல் கழுவ வேண்டும் என்றும், விற்பனையாளர்கள் மீன்களை பதப்படுத்துவதற்காக எந்த விதமான வேதிப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினோம். 



அப்படி வேதிப்பொருட்கள் கலந்த மீன்கள் வந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். 

தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலமாக இருப்பதால் நமக்கு ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்கள் வருகிறது. அதனால் தற்போது வரை வேதிப்பொருட்கள் மீன்களில் கலந்து வருவதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது. அதேபோல நாங்கள் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருவதால் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு வேதிப்பொருட்கள் கலப்படமற்ற மீன்கள் விற்பனை செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...