தொடங்கியது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் : கோவையில் 15,000 லாரிகள் இயங்கவில்லை

கோவை: டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.



கோவை: டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

அனைத்து இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், கோவை லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில் சுமார் 5 லட்சம் இயங்குகின்றன. இவை அனைத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரையில் சுமார் 15 ஆயிரம் லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்ததில் பங்கேற்றுள்ளன.

அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், மருத்து, தண்ணீர் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.



இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.கலியபெருமாள் கூறுகையில், "காந்தியின் வழியான அகிம்சை வழியில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்படும்" என்றார். 



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...