2017-2018 நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி : தெற்கு ரயில்வே

சேலம்: 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

சேலம்: 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சரக்கு மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதற்கு சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை வகித்தார். சேலம் கோட்ட வணிக பிரிவு முதுநிலை மேலாளர் ஏ.விஜுவின் வாடிக்கையாளர்களை வரவேற்றுப் பேசினார்.

பி.பி.சி.எல்., இந்திய உணவுக்கழகம், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், எஸ்.கே.எம்., தீவனம் நிறுவனம், சாந்தி தீவனம் நிறுவனம் மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில், ”சேலம் ரயில்வே கோட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 13.89 சதவீதம் ஆகும். அதாவது, முந்தைய ஆண்டில் சரக்கு வருவாய் ரூ.58.7 கோடியாக இருந்தது," என்றார். 

ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போதைய திட்டங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுடன் விவாதிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு சேவையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்துவித உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...