'அடடா., மழை டா; அட மழை டா..!' - கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை

கோவை: கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 29.5 முதல் 30 டிகிரி செல்சியசாயாகவும் இரவு நேர வெப்ப நிலை 23 முதல் 24 டிகிரி செல்சியாசாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

கடந்த வாரம் 20 கீ.லோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த காற்றின் வேகம் இந்த வாரம் சற்று குறைந்து கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் 14முதல் 16 கிலோ மீட்டர் வரை வீசும்.

எனவே, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். குளிர்ச்சியான தட்ட வெப்ப நிலை நிலவுவதால் பயிர்களை பூச்சி தாக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது." என்றார்.

ஆகவே, கோவை வாசிகளே பெய்யவிருக்கும் மழையில் 'அடடா., மழை டா; அட மழை டா..!' என்று பாடி கொண்டாட காத்திருங்கள்...

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...