அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நகர் ஊரமைப்பு துறையின் டி.டி.சி.பி., (DTCP) அனுமதி பெறாத மனைப்பிருவுகளில் 20.10.2016 க்கு முன்னர் கிரயம் செய்த மனைகளை வரன்முறைப்படுத்துவது குறித்த அறிவிப்பினை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.



அதன்படி, அனுமதியற்ற மனைபிரிவுகளில் விற்கப்பட்ட மனைகளை www.tnlayoutreg.in என்ற நகர் ஊர்மைப்பு துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளர்களின் புகைப்படம், மனைப்பிரிவு வரைபடம், மனை வரைபடம், நில உரிமை சான்று, நில அளவை துறை சான்று மற்றும் வில்லங்க சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய தொகையினை செலுத்தி 03.11.2018 தேதிக்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு ஐந்து மண்டல அலுவலங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...