தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் திருப்பூரில் பறிமுதல்

திருப்பூர்: தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துணை சட்ட விதிகளின் கீழ் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகைக் கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். 



அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் ஒரு டன் பிளாஸ்டிகள் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும், அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இதேபோல், மற்றொரு கடையிலும் 1/2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...