செயற்கை மரத்தின் மூலம் கோவை வ.உ.சி பூங்காவிற்கும் வருகிறது இலவச வைஃபை வசதி

கோவை: கோவை ரயில் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதிகளைத் தொடர்ந்து, வ.உ.சி பூங்காவிலும் இலவச வைஃபை வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.


கோவை: கோவை ரயில் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதிகளைத் தொடர்ந்து,  செயற்கை மரத்தின் மூலம் வ.உ.சி பூங்காவிலும் இலவச வைஃபை வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமார் 25 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் பெஞ்சு'கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஸ்மார்ட் பெஞ்சு அமைக்கப்பட்டது. இதில், இலவச வைஃபை வசதி, சூரிய மின்சக்தி மூலம் மின் இயந்திரங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டன.



மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், ஊழியர்களும் இந்த வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், நகரின் முக்கிய பகுதிகளில் மரங்கள் வடிவிலான 'ஸ்மார்ட் பெஞ்சு'கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இதனையடுத்து, வ.உ.சி மைதானத்தில் ரூ. 12 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் ட்ரீ' எனும் செயற்கை மரம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில், சுமார் 30 பேர் அமரும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தில், இலவச வைஃபை மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, மின் இயந்திரங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உருவாக்கப்படுகின்றன.



'ஸ்மார் ட்ரீ' பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் பொறியாளர் கூறியதாவது :- 600 சதுர அடி பரப்பளவில் 30 பேர் அமரும் வகையில் இந்த செயற்கை மரம் உருவாக்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் பணிபுரியும் கலை இயக்குநர்களிடம் ஆலோசனை பெற்று உண்மையான மரத்தைப் போலவே 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கிளைகள் மற்றும் இலைகள் அனைத்தும் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மழை மற்றும் காற்றைத் தாங்கி நிற்கும் வகையில் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார். 

பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் தங்க நிற வண்ணத்தில் இந்த செயற்கை மரத்தின் இலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இதன் அருகே நின்று இப்போதே செல்ஃபி எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

'ஸ்மார்ட் ட்ரீ' திட்டம் குறித்து கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின், திட்ட மேலாளர் சுபாஷ் கூறுகையில், "செயற்கை மரங்கள் வடிவிலான நவீன வசதிகள் உடைய 25 ஸ்மார்ட் பெஞ்சுகள் நகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இலவச வைஃபை மற்றும் மின் இணைப்பு வசதிகளோடு கலைநயமிக்க வடிவில் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொள்கிறது. இதில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தின் ஒருபகுதி மாநகராட்சிக்கு வழங்கப்படும்.

கட்டுமான தரம் குறித்த ஆய்விற்குப் பிறகு அடுத்த மாதத்தில் வ.உ.சி., மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் முதல் 'ஸ்மார்ட் ட்ரீ' பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் அமைக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...