பெங்களூரில் இருந்து பல்லடம் வந்தன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரிலிந்து கொண்டு வரப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரிலிந்து கொண்டு வரப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன.

வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய் துறையினரால் பெறப்பட்டது.



அந்த இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, 5,880 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,200 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி முன்னிலையிலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையிலும், வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு பல்லடம் வட்டாட்சியர் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...