மீன்களின் வரத்து அதிகரிப்பால் கோவையில் மீன்களின் விலை சரிவு: தற்போதைய விலை என்ன?

கோவை: உக்கடம் மொத்தம் மீன் மார்க்கெட்டிற்கு இன்று மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனையில் மீன்களின் விலை சரிவை சந்துள்ளது.

கோவை: உக்கடம் மொத்தம் மீன் மார்க்கெட்டிற்கு இன்று மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனையில் மீன்களின் விலை சரிவை சந்துள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு கன்னியாகுமரி, கேரள அரபிக்கடல் பகுதிகள், நாகப்பட்டினம், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வருகின்றன.

இதனை உக்கடம் சில்லரை மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள 48 கடை வியாபாரிகளும் எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். அதுபோக. மாவட்டம் முழுவதும் சில்லரை விற்பனையாளர்கள் எடுத்து சென்று பல்வேறு பகுதிகளில் வியாபாரம் செய்கின்றனர்.

இதனிடையே கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் புயல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைந்தது.

கடல் சீற்றம் குறைந்ததை அடுத்து உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலை சரிவடைந்துள்ளது.

விற்பனை

உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு சுமாராக நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் வரை மீன்கள் வருகின்றன. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 70 முதல் 80 டன் வரை மீன்கள் வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக 10 டன் வரை மட்டுமே மீன்கள் வந்த நிலையில் இன்று மீண்டும் 30 டன்கள் மீன்கள் வரத்தொடங்கின.

இதனால் கிலோ ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சரம் மீன் இன்று ரூ.650-க்கு விற்பனையாகிறது. மேலும், ரூ.220-க்கு விற்பனையான அயிலை மீன் ரூ.180-க்கும், ரூ.400--க்கு விற்பனையான பாறை மீன் ரூ.350-க்கும், ரூ. 250-க்கு விற்பனையான சங்கரா மீன் ரூ.170-க்கும், ரூ.400-க்கு விற்பனையான மீன் ரூ.300-க்கும், ரூ.400-க்கு விற்பனையான ஊழி மீன் ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்பனையான மத்தி மீன் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மீன்களில் பார்மலின் ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்கிற வதந்தி காரணமாக சென்னையில் மீன்களின் விலை கடும் விலை சரிவை சந்தித்த நிலையில், கோவையில் வரத்து அதிகம் காரணமாகவே விலை சரிவு சந்துள்ளது என்று வியாபாரிகள் கூறினார்.

இது குறித்து உக்கடம் மீன் மார்க்கெட் தலைவர் H.S. பாவா கூறுகையில், "கோவையில் வழக்கம் போல் மீன் வியாபாரம் நடைபெறுகிறது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் இங்கு உள்ள மீன்களின் எந்த ரசாயனமும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. வரத்து அதிகம் காரணமாக தான் மீன்கள் விலை குறைந்துள்ளது," என்றார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...