பல்லடம் அருகே குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக கிடந்த பெண்

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் உட்பட மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் உட்பட மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. பொன்னுசாமி தினமும் கிணற்றில் மோட்டர் போடுவது வழக்கம் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால், நேற்று மாலை கிணற்றில் மோட்டர் போடுவதற்காக பொன்னுசாமி சென்றார்.

அப்போது, கிணற்றில் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து கிணற்றினுள் பார்த்த போது அதனுள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் மிதந்துள்ளன. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அழுகிய நிலையில் மிதந்த மூன்று உடல்களையும் மீட்டனர். அந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என்றும், குழந்தைகளுக்கு 12 மற்றும் 8 வயது இருக்கும் என்றும் தெரிவித்த போலீசார் அவர்கள் யார்? கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இரண்டு குழந்தைகளுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...