கோவையில் கடல் உணவுத் திருவிழா : கடல் போல திரண்ட உணவு பிரியர்கள்

கோவை: கோவையில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களால் தயாரிக்கப்பட்ட கடல் உணவுத் திருவிழாவில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களால் தயாரிக்கப்பட்ட கடல் உணவுத் திருவிழாவில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் (le- meridian) இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜுலை 13-ம் தேதி தொடங்கிய இத்திருவிழா வருகிற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. கடம்பா (Squits), டைகர் பிராண்ஸ் (Tiger prawns ), லாப்டர் (laughter), கால்ம்ஸ் (calms), அக்டோபஸ் (octobus), சுறா புட்டு உள்ளிட்ட 60 வகையான மீன்களில் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பொதுமக்களின் பார்வைக்காகவும், ருசித்து மகிழவும் வைக்கப்பட்டு உள்ளது. 



மேலும், காண்டினெண்டல், ஒரினெண்டல், தென்னிந்திய கடல் உணவுகள், சைனீஸ், ரசியன் போன்ற நாடுகளின் உணவுகள் இங்கு இடம் பெற்று உள்ளது. 



இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளரும், லீ மெரிடியன் ஹோட்டலின் உதவி தலைமை சமையலருமான கே. சக்திவேல் கூறுகையில், "வாழை இலையில் மடித்துத் தரப்படும் கறிமீன் பொரித்தது உள்ளிட்ட நெத்திலி, மீன்வறுவல், இறால் வறுவல், மத்தி மீன் உள்ளிட்ட பல உணவுகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சமைக்கப்பட உள்ளது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும். பெரியவர்களுக்கு வரியுடன் சேர்த்து ரூ. 1,200, சிறியவர்களுக்கு அதில் 50 சதவீதம் தள்ளுபடி தரப்படும்," என்றார்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...