தொடர் மழை காரணமாக உதகையில் நிலச்சரிவு : கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

நீலகிரி : உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்துள்ளன.

நீலகிரி : உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்துள்ளன. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கூடலூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்திற்கு மேலாக குளிர் காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 3 நாட்களாக நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 



இந்த நிலையில், இன்று காலை உதகையில் உள்ள மாரிஸ் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியிருப்புவாசிகளின் கார்கள் இந்த மண்சரிவில் புதையுண்டன. மேலும், இரண்டு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. 



இதனிடையே, நீலகிரியில் அடுத்த இருநாட்களுக்குக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பயத்துடன் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...