ஏர்வால்வு உடைப்பால் திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரின் அளவில் சரிவு

கோவை: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் ஏர்வால்வு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரானது, ஆழியாறு அணைக்குள் பாய்ந்து செல்கிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் ஏர்வால்வு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரானது, ஆழியாறு அணைக்குள் பாய்ந்து செல்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொள்ளாச்சி அருகே உள்ள தூணக்கடவு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு 950 கன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சர்க்கார்பதியில் மின் உற்பத்திக்கு பிறகு தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. 



இந்நிலையில், ஆழியார் அருகே உள்ள சின்னார்பதி மலை குகையில் அமைக்கப்பட்டுள்ள ஏர் வாழ்வு (காற்று குழாய்) திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் கசிந்து வருகிறது. அங்குள்ள மேல்மட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பழுதடைந்த பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனிடையே, கசிவு அதிகமாக ஏற்பட்டால் சின்னார்பதி மலைவாழ் குடியிருப்பில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரின் பெரும்பகுதி, ஆழியாறு அணையில் கலக்கின்றது . இந்த ஏர்வால்வு உடைப்பால், அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...