மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்: மாத சாந்தா செலுத்தக்கூறி பல லட்சம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும், டிஸ்க்-அக்ரோ என்கிற நிறுவனம் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருபவர்களிடம், மாத சாந்தா மூலம் பணத்தை சேமித்து 5 வருடங்களில் இரண்டு மடங்காக மாற்றலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளது.

இதை நம்பி ஏமார்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ 1000, ரூ.500, ரூ.300 என பணத்தை செலுத்தினர். 60 - மாதம், 90 - மாதம் முடிவில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய அந்த நிறுவனம், மாதம் ரூ.1000 வீதம் 63 மாதங்கள் செலுத்தினால் முதிர்வு தொகையாக ரூ. 1-லட்சம் தருவதாகவும் கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளனர்.



இது குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள், "பணத்தை முதலீடு செய்தவர்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே தங்களது பணத்தை சென்று கேட்டதற்கு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவதாக கூறுகின்றனர். பணத்தை தராமல் காலம் கடத்தி வருகின்றனர். முதிர்வு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...