பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை -தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 4-ம் தேதி நிரம்பியது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை நீர்மட்டம் எட்டியதால் அன்று முதலே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. 



இன்று காலை முதல் மதியம் வரை அணையின் நீர்வரத்தான 8000 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து திடீரென 22,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்வரத்து அப்படியே வினாடிக்கு 22,000 கனஅடி என பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 



இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, கரைபுரண்டு ஓடும் பவானியாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்துள்ளார். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கவும் கரையோர பகுதிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...