அடிப்படை வசதிகள் வேண்டி திருப்பூர் ஆட்சியரிடத்தில் பொதுமக்கள் மனு

திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் அருகில் உள்ள காளிபாளையம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், தார் சாலை வசதிகள் இல்லை என்றும், பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளுக்கு பேருந்து வசதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, அரசு அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு கொடுத்ததும் பயனில்லை என்றும், வாக்கு கேட்டு மட்டும் வரக்கூடியவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தங்களது பகுதிகளைக் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட எங்களது கிராமத்தில் சுமார் ஐந்து வருடமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை. தற்போது தான் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த பிரச்சனை குறித்து நல்லூர் நகராட்சியில் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தமுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்." என்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...