கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்: பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவு (304)-ஐ பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைக்கு, பிறகு இன்று ஆறுமுகத்தை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 ல் நீதிபதி (பொறுப்பு) ஞானசம்பந்தம் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



இதில் ஆறுமுகத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலி பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Video: Laxman

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...