ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம்!: இன்று முதல் அமல்

கோவை: உயிரிழப்புக்களை தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என்கிற புதிய சட்டம் நடைமுறையில் வர உள்ளது.



கோவை: உயிரிழப்புக்களைத் தடுக்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என்கிற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சர்வதேச செல்பி தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுக்க மக்கள் இதற்காக வித்தியாசமான செல்பி போட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அதற்கு மறுநாளே இன்று, இந்தியாவில் வித்தியாசமான சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இனி ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியே மட்டுமே இனி செல்பி எடுக்க முடியும்.

சில நாட்களுக்கு முன், ஒரு இளைஞர் ரயிலுக்கு முன் செல்பி வீடியோ எடுக்க சென்று பலியானார். இதே போல் செல்பி வீடியோ எடுக்க முயன்ற பலர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...