15 நாட்களில் மூன்று பேரைத் தாக்கிய சிறுத்தைப்புலி : கூண்டு வைத்து பிடிக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

கோவை : வால்பாறையில் கடந்த 15 நாட்களில் சிறுத்தைப்புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.


கோவை : வால்பாறையில் கடந்த 15 நாட்களில் சிறுத்தைப்புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

சின்கோனா எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளி மாதவி (35) என்பவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம், வால்பாறை மற்றும் அவரது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களில் மூன்று பேரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. 



குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து நடமாடி வரும் சிறுத்தைப் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி சின்கோனா அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிப்பதாக வனத்துறையினர் உறுதியளித்திருந்தனர். அதன்படி, அங்கு கூண்டு வைத்திருந்தாலும், சிறுத்தைப்புலியைப் பிடிப்பதற்காக இரை ஏதும் அதில் வைக்கப்படுவதில்லை. இதனால், தான் சிறுத்தைப்புலி இன்னும் கூண்டில் அகப்படாமல், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இதனிடையே, தேயிலைத் தோட்டத் தொழிலாளி மாதவியை சிறுத்தைப்புலி தாக்கியதன் காரணமாக, அங்கு பணிபுரியும் பிற தோட்டத் தொழிலாளர்கள் செல்லவில்லை. மாறாக, டாண்டீ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்து, உடனடியாக மாவட்ட வனத்துறை அலுவலர் மாரிமுத்து, வனத்துறை அலுவலர் சேகர், டாண்டீ நிர்வாக இயக்குநர் சீனிவாச ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, உடனடியாக அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள புதர்கள் அகற்றப்படும் போன்ற வாக்குறுதிகளை அவர்கள் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், மழையின் காரணமாக அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் மின்சாரமும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...