தமிழகக் கல்வித்துறையின் முடிவால் ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க மாநில கல்வித்துறை முடிவு செய்திருப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க மாநில கல்வித்துறை முடிவு செய்திருப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடப்பட்டுள்ளது.



கோவை ஸ்மார்ட் சிட்டியின் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வார்டுகளில் அமைந்துள்ள 22 மாநகராட்சி பள்ளிகளில், 5 பள்ளிகளை 'ஸ்மார்ட் பள்ளி'களாக தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டது.

இப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஸ்மார்ட் போர்டு அமைத்தல், பாடத்திட்டங்களை இணையவழியில் பெறுதல், நவீன உட்கட்டமைப்புகளை உருவாக்குதல், நவீன கழிப்பறைகள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள கடந்த வருடம் நவம்பர் மாதம் அரசு அனுமதி பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சென்ற பிப்ரவரி மாதம் தொழில்நுட்ப அனுமதியும், ஒப்பந்தப்புள்ளிகளும் பெறப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட இருந்தன.

இந்நிலையில், அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்திடவும், நவீன டிஜிட்டல் வகுப்பறைகளை அமைத்திடவும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.



இதனையடுத்து, கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பள்ளிகளை ’ஸ்மார்ட் பள்ளி’களாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து கோவை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "அனைத்து அரசு பள்ளிகளையும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப் பள்ளி கல்வித்துறை முடிவு செய்திருப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்காக இந்நிதியாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 27.51 கோடி நிதி, மற்ற வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்படும்,"என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...