நீலகிரியின் தந்தை சல்லிவனின் பிறந்த நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

நீலகிரி : நீலகிரியின் தந்தை சர் ஜான் சல்லிவனின் 230-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி மரியாதை செய்தார்.

நீலகிரி : நீலகிரியின் தந்தை சர் ஜான் சல்லிவனின் 230-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி மரியாதை செய்தார். 

நீல மலைகளையும், பள்ளத்தாக்கு காட்சிகளையும் கொண்ட மலைகளின் அரசியாக திகழும் நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் சர் ஜான் சல்லிவன். இவரது 230-வது பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜுன் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஆங்கிலயேர் ஆட்சி காலத்தில் 1817-ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சல்லிவன், 1819-ம் ஆண்டு மலையேற்ற பயணமாக நீலகிரிக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் முக்கிய பங்காற்றினார். இதனால், முதன்முதலாக அவர் தங்கிய கன்னேரிமுக்கு கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், ஆண்டுதோறும் சல்லிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

நீலகிரியை உலகிற்கு அறிமுகம் செய்ததோடு, தேயிலை, கேரட், உருளைக்கிழங்கு மட்டுமல்லாது, பல்வேறு ஆங்கில காய்கறிகளை மற்றும் பழங்களை மாவட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்மூலம், மாவட்ட பொருளாதாரத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த காரணமாக நீலகிரியின் தந்தை என்று சர் ஜான் சல்லிவன் அழைக்கப்படுவதுண்டு. 

இந்த நிலையில், அவரது 230-வது பிறந்த நாளையொட்டி கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிவன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...