குறிச்சி குளத்திற்கு நீர் வருகிறது: வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம்..!

கோவை: குறிச்சி குளத்திற்கு வரும் நீரை புட்டுவிக்கி அணையின் மதகுகள் கொண்டு தடுப்பதாக பரவும் வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


கோவை: குறிச்சி குளத்திற்கு வரும் நீரை புட்டுவிக்கி அணையின் மதகுகள் கொண்டு தடுப்பதாக பரவும் வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. தன்னார்வலர்கள் செய்த தூய்மைப் பணியின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வற்றிக் கிடந்த நொய்யல் அன்னை, மழையின் காரணமாக கரைபுரண்டோடிய காட்சிகள் கோவை மக்களின் உள்ளத்தை குளிர்வித்தது.

இந்த சூழலில், குறிச்சி குளத்திற்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாகவும், அந்த குளத்திற்கு வரும் நீரை சிலர், புட்டுவிக்கி தடுப்பணையில் உள்ள மதகுகளை அடைத்து தடுப்பதாகவும் வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது.



ஆனால், அந்த செய்தி தவறானது என்றும், குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...