பிறை தென்படாததால் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். 

ரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இதனால், ரமலான் விடுமுறை நாளையா..? அல்லது நாளை மறுதினமா..? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், ரமலான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பொதுவிடுமுறை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல, நாளை செயல்படும். சனிக்கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கோவை ஹிலால் கமிட்டியின் சார்பில் ஷவ்வால் பிறை பார்த்து நோன்பு பெருநாள் முடிவு செய்யும் கூட்டம், ஷம்சுல் இஸ்லாம் ஹனஃபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் M.A. இஸ்மத் தலைமையில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் எங்கும் ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரமலான் பிறை 30-ஆக பூர்த்தி செய்து, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஷவ்வால் பிறை 1 என்றும் நோன்பு பெருநாள் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...