சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகுன்டஞ்சாவடி - வீரபாண்டி சாலை, மவேலிபாளையம் - மகுன்டஞ்சாவடி, சங்கரி துர்க் - மவேலிபாளையம் ஆகிய இடங்களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில், 13-ம் தேதி முதல் ஜுலை 03-ம் தேதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோவை - சேலம் - கோவை இடையே இயக்கப்படும் ரயில் (எண் : 66602/66603) ஈரோடு-சேலம்-ஈரோடு இடையிலான சேவையை வரும் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலின் சேவை அடுத்த மாதம் 03-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படும். 

இதேபோல, வரும் 26-ம் தேதி வரை இயக்கப்படும் குறிப்பிட்ட ரயில்கள் சில தினங்களுக்கு தாமதமாக இயக்கப்படுகின்றன. ஐதராபாத் - கொச்சுவெளி வாராந்திர சிறப்பு ரயில், பிலாஷ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், திருவனந்தபுரம்- மும்பை எக்ஸ்பிரஸ், அலப்பி-டாடா அல்லது தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பிலாஷ்பூர்- திருநெல்வேலி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை கோவை எக்ஸ்பிரஸ், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட இருக்கின்றன. 

ஈரோடு-திண்டுக்கல் இடையே மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரயில், ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் வரும் 26-ம் தேதி வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதே போல, அடுத்த மாதம் 9-ம் தேதி கோவை-நாகர்கோவில், திருநெல்வேலி-ஈரோடு பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில்சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில் ஆத்தூர்-விருதாச்சலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. 



இதனிடையே, சேலம் தெற்கு ரயில்வே சார்பில் சங்கரி துர்க் பகுதியில் ஆபத்து கால மீட்புக் குழுவினருக்கு முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...