நாளை வெளியாகும் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க தீர்ப்பால் ஆட்சி மாற்றம் நிகழும் : கோவையில் செந்தில்பாலாஜி நம்பிக்கை

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை குறிச்சி பகுதியில் அ.ம.மு.க., சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாளை (ஜுன் 14) வெளியாகும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, 18 பேரும் மீண்டும் சட்டமன்றப் பணிகளை செய்யும் வகையில் நல்ல தீர்ப்பாக வரும். மேலும், மீண்டும் சட்டமன்றத்திற்கு டி.டி.வி., தினகரன் தலைமையில் செல்வோம். 6 கோடி வாக்காளர்களும் விரும்பும் வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கான தீர்ப்பாக அமையும். தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாகவும் இருக்கும். 

மேலும், சென்னை - சேலம் இடையே புதிய சாலையினை மக்கள் எதிர்ப்பை மீறி அடாவடித்தனமாக செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் தயாராக இல்லை. மத்திய மோடி அரசின் நிழல் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் இருக்கும். டி.டி.வி., தினகரன் அடுத்த முதலமைச்சராவர். 

தமிழக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்து வரும் அமைச்சர்கள் ஆட்சி.மாற்றத்திற்குப் பின்னர் சிறைக்கு செல்வார்கள், என்றார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...