கோவையில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : கைதானவர்களுக்கு போலீஸ் காவல்

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் ரூ. 83 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேருக்கு போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வாரம் சாய்பாபா காலனியில் போலீசார் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரிடம் ரூ. 2,000 நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவற்றை சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வேலாண்டிபாளையம் தடாகம் சாலையில் உள்ள அலுவலகத்தில், ரூ. 83 லட்சம் போலி ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனிடையே, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கிதர் முகமது, சுந்தர் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போலி நோட்டுகள் அச்சடித்த வழக்கில் ஆனந்திற்கு ஒரு நாளும், கிதா் முகமது, சுந்தா் ஆகியோருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி பாண்டி உத்தரவிட்டார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...