கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் தென்மேற்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள், மேம்பாட்டுப் பணிகள், ஏரிகள், 24 மணி நேர குடி நீர் விநியோகப் பணிகள் குறித்தும்,பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
பருவமழை
தென்மேற்கு பருவமழையையொட்டி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களை தேவையான இடங்களில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.
மேலும், மாநகராட்சியிலுள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும், வாய்க்கால்கள் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும், தூர்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களை பராமரித்தல் குறித்தும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் த.ஞானவேல், மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டங்கள்;) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள், மேம்பாட்டுப் பணிகள், ஏரிகள், 24 மணி நேர குடி நீர் விநியோகப் பணிகள் குறித்தும்,பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
பருவமழை
தென்மேற்கு பருவமழையையொட்டி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களை தேவையான இடங்களில் தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.
மேலும், மாநகராட்சியிலுள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்தும், வாய்க்கால்கள் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும், தூர்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களை பராமரித்தல் குறித்தும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் த.ஞானவேல், மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டங்கள்;) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.