வேகமாக நிரம்புகிறது சோலையாறு அணை

வால்பாறை: தொடர் கன மழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 114 அடியாக உயர்ந்துள்ளது.


வால்பாறை: தொடர் கன மழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 114 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

வால்பாறையை பொறுத்த வரையில், இன்று காலை நிலவரப்படி சின்னகல்லாரில் 103 மி.மீ மழையும், நீரார் அணை பகுதியில் 86 மி.மீ மழையும், வால்பாறையில் 64 மி.மீ மழையும், சோலையார் அணை பகுதியில் 108 மி.மீ மழையும் கொட்டித்தீர்த்தது.



இதன் காரணமாக ஆறுகள் சிற்றோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், அணை நீர் மட்டம் உயர்ந்து தற்போது 114 அடியாக உள்ளது.

தொடர்ந்து இதே போல் மழை பெய்தால் இன்னும் சில நாட்களில் சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சராசரியாக 26.07 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 55 அடியில், தற்போது 38 அடி வரை நீர் இருப்பு உள்ளது. பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 97 அடி வரை நீர் இருப்பு உள்ளது. ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், தற்போது 59.40 அடி வரை நீர் இருப்பு உள்ளது.



நீலகிரி மாவட்ட அணைகளை பொறுத்தவரையில், எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் தற்போது 128 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. முக்கூர்த்தி அணையின் மொத்த கொள்ளளவான 18 அடியில் தற்போது 14 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 84 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. சாண்டிநல்லா அணையின் மொத்த கொள்ளளவான 49 அடியில் தற்போது 40 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.



கிளன்மார்கன் அணையின் மொத்த கொள்ளளவான 33 அடியில் தற்போது 26.5 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. மாயார் அணையின் மொத்த கொள்ளளவான 17 அடியில் தற்போது 15 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன்ஸ் வேலி அணையின் மொத்த கொள்ளளவான 58 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. போர்திமந்து அணையின் மொத்த கொள்ளளவான 130 அடியில் தற்போது 114 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அவலாஞ்சி அணையின் மொத்த கொள்ளளவான 171 அடியில் தற்போது 132 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

அப்பர் பவானி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் தற்போது 128 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியில் தற்போது 88.5 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கெத்தை அணையின் மொத்த கொள்ளளவான 156 அடியில் தற்போது 154 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...