கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



கவுண்டம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள டிரைவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள துடியலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இத்தனை புகார்கள் கொடுத்தும், தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென, கவுண்டம்பாளையம் - இடையார்பாளையம் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...